நிகழ்ச்சிநிரல்         

 

கிருபை சுவிசேஷ சபையினரின் ஒன்றுகூடுதல்


   வாராந்த நிகழ்ச்சிநிரல் 

ஞாயிறு ஆராதனை

Sonntag / Sunday    10.30am    Claudiusstr. 44    44649 Herne

 

அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்

அப்போஸ்தலர் 2:42

 

தேவ ஆராதனையாக ஆக்குவது தேவனுடைய வார்த்தையினால் கேட்கப்பட ஏதுவாக இருக்கும் அவரது குரல்தான். இதுவே மற்றைய அனைத்து ஆராதனைகளிலிருந்து பிரிந்திருக்கும் தனித்துவ தேவ ஆராதனை. தேவனுடைய செய்தியைக் கேட்கும் விசுவாசிகள் அதற்கு  பாடல்களுடனும் ஜெபங்களுடனும் மறு மொழி கொடுக்கின்றவர்கள். ஆராதனையின் உள்ளடக்கத்தை தேவனுடைய வார்த்தையிலும் அவரது செயல் பாட்டிலுமிருந்து காண்கிறோம். இங்கு தேவன் தமது சந்நிதானத்திற்கான வாக்கை பரிசுத்த ஆவியின் ஊடாக கொடுத்துள்ளார். எனவேதான் ஞாயிறு தோறும் தேவனுடைய பரிசுத்த வார்த்தையை அத்திவாரமாகக் கொண்டு குடும்பங்களாக தேவனை ஆராதித்துவரும் வழக்கம் எங்களுக்குள் இருந்துவருகிறது. இது எங்களது சபையின் பெரும்பாலானோரைக் கொண்ட சந்திப்பாகும்.  பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து குடும்பமாக கர்த்தரை துதிக் கும் இந்த நல்ல வழக்கம் எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்பதை  நாங்கள் மறப்பதில்லை. இத்தேசத்தில் பிறந்து வளர்ந்த நமது சிறியவர்கள், இளைஞர்கள் யாவரும் கடவுளுடைய பரிசுத்த வார்த்தையை தெளிவாக விளங்க எங்களது ஞாயிறு ஆராதனை ஒரே தடவையில் தமிழ், ஜேர்மன் மொழிகளில் நடைபெறுகின்றது. ஏனெனில் எங்களுடன் சேர்ந்து நமது மீட்பரான இயேசுவை ஆராதிக்கும் ஒவ்வொருவரும் போதுமான ஆவிக்குரிய உணவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கவனம் எங்களுக்குள் இருப்பதே இதற்கான காரணம். தேவ வார்த்தையை மத்திமமாக வைத்து நடத்தப்படும் இந்த ஆராதனை நமது ஆத்தும பசியைப் போக்கும் நன்மையாயுள்ளது

 

 

 

Wednesday/Mittwoch 7pm